search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் தடை"

    • மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
    • பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மலைக்கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த கல்வியாண்டில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், இளைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் சிலர் மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நடந்து வந்தது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகமும் இன்று முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளது. மேலும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்கள் வாங்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிறப்புபயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பாதவிநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை என்பதால் அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.

    • நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.
    • மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செல்போன்களை வகுப்பறைக்குள் கொண்டு வர க்கூடாது.

    பணிக்கு வரும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அங்குள்ள ஒரு அறையில் செல்போன்களை வைத்து விட்டு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

    செல்போன் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் கல்லூரி முதல்வர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.

    அங்குள்ள நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

    அவ்வாறு முன் அனுமதிபெறாமல் முதல் முறையாக செல்போன் பயன்படுத்தினால் எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

    செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. #TNColleges #MobileBan
    சென்னை:

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. 

    செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
    ×